விஜயவாடா:ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள பெனமலூர் போலீசாரிடம் நேற்று (டிசம்பர் 20) பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் அளித்தார். அந்த புகாரில், பெனமலூர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்துவந்த தன்னை டிசம்பர் 17ஆம் தேதி அடையாளம் தெரியாத 4 பேர் சாலையில் நடந்து சென்றபோது வழிமறித்ததாகவும், அதன்பின் அதே பகுதியில் உள்ள அறையில் பூட்டி கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் தெரிவித்தார்.
ஆந்திராவில் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு.. மூன்று நாட்களாக நடந்த கொடூரம்..
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு
அதோடு மூன்று நாட்களாக மதுபோதையில் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது புகாரின் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மூட நம்பிக்கையில் மனைவியுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன்