தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 9, 2021, 9:43 PM IST

ETV Bharat / bharat

வட கிழக்கு மாநிலங்கள் யுகத்தை நோக்கி பயணிக்கிறது - வெங்கையா நாயுடு

கடந்த ஏழு ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களில் வன்முறை பெருமளவில் குறைந்து, புதிய யுகத்தை நோக்கி பிராந்தியம் பயணிக்கிறது என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

North-eastern region
North-eastern region

அருணாசலப் பிரதேச சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்ற சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, " வட கிழக்குப் பிராந்தியம் நீண்ட காலப் பிரச்னைகளுக்கு தீர்வை கண்டுபிடித்து, புதிய எதிர்காலத்தை நோக்கி பயணிப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இப்பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டே அரசு திட்டங்களை தீட்டிவருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை தரும் ஆற்றல் அருணாசலப் பிரதேசத்திற்கு உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களில் வன்முறை பெருமளவில் குறைந்துள்ளது. இனி புதிய யுகத்தை நோக்கி இப்பிராந்தியம் பயணிக்கவுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ஆரியன் கான் விவகாரம்: மூவர் விடுதலை குறித்து கேள்வியெழுப்பிய நவாப் மாலிக்

ABOUT THE AUTHOR

...view details