ஹைதராபாத்:உலகம் முழுவதும் வரும் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனினும், காதலர் தின வாரம் கடந்த 7ம் தேதி ரோஜா தினத்துடன் (ரோஸ் டே) தொடங்கியது. காதலர் தின வாரத்தின் ஒவ்வொரு நாளும், வெவ்வெறு கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுவாகவே, காதலர் தினத்தன்று ஒவ்வொருவரும் தங்கள் இணைக்கு வழங்கும் பரிசுகள், மகிழ்ச்சியான நினைவுகளைத் தரும். அந்தப் பரிசு எளிதில் மறக்க முடியாததாகவும், நீண்ட நாள் நினைவில் நிற்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது காதலர்களின் விருப்பம்.
காதலர் தினத்தன்று கொடுக்கக் கூடிய பரிசு, நிச்சயம் தமது இணையை வெகுவாக கவர வேண்டும் என்ற எண்ணத்தில், எந்த பரிசுப் பொருளை வாங்கலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையுடன் இருப்பவர்கள் ஏராளம்.
ரோஜாப்பூ:காதல் வெளிப்பாட்டின் மிக முக்கிய அடையாளம் இது. அன்பை வெளிப்படுத்தும் ரோஜாப்பூவை, நமது காதல் இணைக்கு வழங்கலாம். அது அவர்களுக்கு காதலர் தினத்தின் சிறந்த பரிசாக இருக்கும்.
கேண்டில் லைட் டின்னர்:இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி ஒளியில், இணையுடன் பொழுதை கழிப்பதே அலாதியானது தான். விரும்பிய உணவை வாங்கிக் கொடுத்து, அன்பைப் பரிமாறலாம்.