தமிழ்நாடு

tamil nadu

'கட்சி சின்னத்தில் இனிப்புகள்' கார சாரமாகும் மேற்கு வங்க தேர்தல்!

By

Published : Mar 4, 2021, 4:04 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சி சின்னங்கள் பொறித்த இனிப்புகள் விநியோகிக்கப்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bengal
மேற்கு வங்கம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளதால், அரசியல் கட்சியினரின் பரப்புரைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் இயங்கும் பிரபல மிட்டாய் தயாரிப்பு கடையான மா காந்தேஸ்வரி ஸ்வீட்ஸ், அரசியல் கட்சி சின்னங்கள் பொறித்த இனிப்புகளை, மக்களுக்கு விநியோகித்து வருகிறது. கட்சிகளுக்கு ஏற்றப் இனிப்புகளின் நிறங்களையும் வடிவமைத்துள்ளனர். காவி கலர் ஸ்வீட்டில், பாஜகவின் தாமரை சின்னமும், பச்சை நிற ஸ்வீட்டில், திரிணாமுல் காங்கிரஸின் மூன்று இலை சின்னமும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பேசிய கடையின் உரிமையாளர், "சட்டப்பேரவை தேர்தலில் ஒரு கட்சியினர் தான் வெற்றிப்பெற்று ஆட்சியில் அமரவுள்ளனர். ஆனாலும், அனைத்து கட்சியினரிடையேயான உறவு, இனிப்பை போல் ஸ்வீட்டாக இருந்திட வேண்டும். தற்போதைய சூழலில் இந்த அரசியல் கலந்த இனிப்பு அவசியம்" என்றார். இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

ABOUT THE AUTHOR

...view details