தமிழ்நாடு

tamil nadu

சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா

By

Published : Aug 13, 2022, 1:14 PM IST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கடந்த ஆக.11ஆம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு இன்று (ஆக. 13) கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். அவரின் ட்வீட்டில்,"காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அரசின் வழிமுறைப்படி அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன், கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சோனியா காந்தி கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு அதிகமான நிலையில், டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த ஜூன் 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவர் ஜூன் 20ஆம் தேதி வீடு திரும்பினார். கரோனா தொற்று பாதிப்பிற்கு பின் நேஷ்னல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக மூன்று முறை அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என்கிறார் நிதிஷ் குமார்

ABOUT THE AUTHOR

...view details