தமிழ்நாடு

tamil nadu

உத்தரகாண்ட் மாநில வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த அமித் ஷா

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கள நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

By

Published : Oct 21, 2021, 8:15 PM IST

Published : Oct 21, 2021, 8:15 PM IST

அமித் ஷா
அமித் ஷா

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தேவ்பிரயாக், ராம்நகர், ராம்கர், கவுலாப்பர் மற்றும் ருத்ராபூர் உள்ளிட்ட பகுதிகளை உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா வான்வழியாக இன்று (அக்.10) ஆய்வு செய்தார்.

உத்தரகாண்ட் ஆளுநர் குர்மீத் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு டி எஸ் ராவத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனில் பலுனி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வான்வழி ஆய்வுக்குப் பிறகு, அதிகாரிகளுடன் அமித் ஷா உரையாடினார்.

அப்போது அவர், அக்டோபர் 16-ம் தேதி 24 மணி நேரத்திற்கு முன்னதாக மத்திய அரசு எச்சரிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரணப் படை, தேசிய பேரிடர் நிவாரணப் படை, இந்திய-திபெத் எல்லையோரப் படை, ராணுவம், விமானப்படைக்கு மாநில அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கைகள் அனுப்பியதால் பெரும் சேதத்தைத் தடுக்க முடிந்தது எனக் கூறினார்.

அனைவருக்கும் தொலைபேசி வாயிலாக முன்கூட்டியே எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. இதனால் தேவையற்ற இயக்கங்கள் தவிர்க்கப்பட்டு மழை துவங்கும் முன் சார் தாம் யாத்ரீகர்கள் நிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக சார் தாம் யாத்ரீகர்கள் யாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நைனிடால், ஹல்ட்வானி மற்றும் அல்மோரா சாலைகளும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. ஒரிரு இடத்தில் ரயில் தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. அவற்றை மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 60 விழுக்காடுக்கும் அதிகமான இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதுய மக்கள் சுத்தமானக் குடிநீரைப் பெறத் தொடங்கியுள்ளனர் மற்றும் சுகாதார வசதிகள் பாதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் நிவாரணப் படையின் 17 குழுக்கள், மாநில பேரிடர் நிவாரணப் படையின் 60 குழுக்கள், பிஏசி-யின் 15 குழுக்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் இன்னும் முழு நடவடிக்கையிலும் மக்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டுள்ளனர்.

மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் மத்திய பங்காக ரூ 749.60 கோடியை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:TOP 10 HIGHLIGHTS: 100 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ் மைல்கல்

ABOUT THE AUTHOR

...view details