சித்தூர்(ஆந்திரப் பிரதேசம்):ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்திய 13 பேரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான 115 மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். சிறப்பு படையினரால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரகசியத் தகவலின் அடிப்படையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டதாகவும், அப்போது, இரண்டு கார்கள், ஒரு லாரி முழுவதும் செம்மரக்கட்டைகள் கடத்திவந்ததை கண்டுபிடித்ததாகவும், சிறப்பு தனிப்படையினர் இந்த நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளனர்.