உத்தரப்பிரதேசம் (அயோத்தி):உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயில் கட்ட பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெறப்படுகிறது. இந்தநிலையில் இந்தாண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான கால கட்டத்தில் மட்டும் ரூ.3,400 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை இன்று(ஜூன் 30) தெரிவித்துள்ளது.
மகர சங்கராந்தி (ஜனவரி 15) முதல் சந்த் ரவிதாஸ் ஜெயந்தி (பிப்ரவரி 16) வரை சுமார் 11 கோடி மக்களிடமிருந்து ரூ.3,400 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அலுவலர் பிரகாஷ் குப்தா தெரிவித்தார்.