தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 20, 2021, 4:22 PM IST

ETV Bharat / bharat

காய்கறி வியாபாரியை காலால் உதைக்கும் காவல் ஆய்வாளர்: அதிர்ச்சி வீடியோ!

பெங்களூரு: கர்நாடகாவில் ஊரடங்கை மீறி கடைகளை திறந்ததாக கூறி காய்கறி வியாபாரியை தாக்கிய காவல் துறையினரின் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

வியாபாரியை தாக்கிய காவல் துறை
வியாபாரியை தாக்கிய காவல் துறை

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள சதர் பஜாரில் கரோனா ஊரடங்கை மீறி காய்கறி கடைகள் இயங்கி வருவதாக காவல் ஆய்வாளருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர், ஊரடங்கு விதிகளை மீறி காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறி, காய்கறி வியாபாரியை காலால் உதைத்துள்ளார்.

வியாபாரியை உதைக்கும் காவல் துறையினரின் வீடியோக்கள், புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: முதியோருக்கு உடனடி உதவி: அசத்தும் வேலூர் காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details