தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 8:10 PM IST

ETV Bharat / bharat

தொடங்கியது பிஎஸ்எல்வி சி-49 கவுண்ட் டவுன்!

நெல்லூர் : பிஎஸ் எல்வி சி-49 ஏவுகணை, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை மதியம் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

பிஎஸ்எல்வி சி 49
பிஎஸ்எல்வி சி 49

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ் எல்வி சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன், இந்திய நேரப்படி இன்று (நவ.06) மதியம் 1.02 மணிக்குத் தொடங்கியது.

அடுத்த 26 மணி நேரத்திற்கு இந்தக் கவுண்ட் டவுன் தொடர உள்ள நிலையில், பிஎஸ் எல்வி சி-49 ஏவுகணை, நாளை (நவ.07) மதியம் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகைக் கண்காணிக்க உதவும் செயற்கைக்கோளுடன் சேர்த்து மேலும் ஒன்பது செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details