பாட்னா:பீகார் மாநிலம் பாட்னா அடுத்த தனபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிறைக் கைதியை போலீசார் அழைத்து வந்து உள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் சிறைக் கைதி காத்திருந்த நிலையில், திடீரென அங்கு வந்த இரண்டு பேர் கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் நிதிமன்ற வளாகத்திலேயே கைதி பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார், துப்பாக்கி முனையில் கைது செய்தனர். உயிரிழந்த நபர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் கடந்த சில மாதஙகளாக சிறையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.