தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

G20 மாநாடு: பிரதமர் மோடியின் பெயர் பலகையில் "பாரத்"... கொந்தளிக்கும் I.N.D.I.A கூட்டணி!

G20: "BHARAT" Name Plate Issue: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கான இருக்கையில் பாரத் என பெயர் பலகை வைத்தது கூடுதல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 3:43 PM IST

pm-narendra-modis-bharat-nameplate-at-g20-angers-india-bloc-opposition
G20 மாநாடு: நரேந்திர மோடி பெயர் பலகையில் "பாரத்" - கொந்தளிக்கும் I.N.D.I.A கூட்டணி!

டெல்லி: இந்தியாவை 'பாரத்' என்று குறிப்பிட்ட விவகாரம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.9) G20 மாநாட்டில் அமரும் இடத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் I.N.D.I.A கூட்டணியிடம் எதிர்ப்பை எற்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.பியும் சி.பி.எம் மத்திய குழு உறுப்பினருமான ஹன்னன் மொல்லா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "பா.ஜ.க அரசு சர்வாதிகாரமாக மாறிவிட்டது. மேலும் என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்துவிட்டனர். இந்தியாவை 'பாரத்' என்று குறிப்பிட்ட விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில் G20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் பலகையில் 'பாரத்' என்று பயன்டுத்திய செயல் பா.ஜ.க அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் கலீக் கூறும் போது, "G20 மாநாட்டில் பெயர் பலகை விவகாரம் ஆளும் பாஜக கேலிக்கூத்துகளில் ஒன்று. உலக நாடுகள் அனைத்தும் இந்தியா என்றே தெரிந்துள்ளன. அரசியலமைப்பிலும் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விகளை மறைக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:G20 summit: கோலாகலமாக தொடங்கும் ஜி20 மாநாடு! உலக தலைவர்கள் இந்தியா வருகை!

'பாரத்' என்பது நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் என்றும் இது அரசியலமைப்புச் சட்டத்திலும் 1946 முதல் 1948 விவாதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என புத்தகங்களின் மூலம் தெரியவருகிறது. மேலும் 'பாரத்' என்று G20 குறிப்புகளில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான தலைப்பு இது "ஜனநாயகத்தின் தாய்" என்ற தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா என்ற பெயர் 'பாரத்' என்று குறிப்பிட்ட முதல் சர்ச்சையானது, G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கான இரவு உணவு அழைப்பிதழில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய அழைப்புக் கடிதத்தில் வழக்கமாக இடம் பெறக் கூடிய இந்திய குடியரசுத் தலைவர் என்பது இல்லாமல் பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டு இருந்தது.

இதனை பல்வேறு எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தனர். பா.ஜ.க அரசியல் சாசனத்துடன் விளையாடுவதாக எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் செப்டம்பர் 18 முதல் 22 வரை தலைநகர் டெல்லியில் நடைபெறக் கூடிய நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்பதற்கு பதிலாக 'பாரத்' என்று கொண்டு வருவதற்கான தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details