கோபன்ஹெக்: டென்மார்க்கில் நடைபெறும் இரண்டாவது இந்தோ- நார்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொகிறார். இந்த உச்சி மாநாட்டில் டென்மார்க், ஐஸ்லாந்து,பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் ஊரடங்கினால் ஏற்படும் விளைவுகள், பருவநிலை மாற்றம், புதிய கண்டுபிடிப்புகள், மாற்று சக்தி பயன்பாடு, உலக பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் பல நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதன் மூலம் நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்த முடியும் என தெரிவித்தார்.