தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2020, 5:39 PM IST

ETV Bharat / bharat

பாரசீக படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி; தேடுதல் தீவிரம்!

மங்களூரில் பாரசீக படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை மீட்க தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Persian boat sinks in Mangalore: 2 dead bodies found, Search operation continued
Persian boat sinks in Mangalore: 2 dead bodies found, Search operation continued

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று இருபதுக்கும் மேற்பட்டோருடன் ஸ்ரீரக்ஷா எனப் பெயரிடப்பட்ட பாரசீகப் படகு கடலில் மீன்பிடிக்கச் சென்றது. இந்தப் படகு பாறை மேல் மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கியது.

இந்நிலையில், படகில் பயணம் செய்த மீனவர்களில் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள், ஆழ்கடல் நீச்சல் தெரிந்தவர்கள் படகில் இருந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சிக்கியவர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், படகில் பயணித்த ஆறு பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ராஜஸ்தான் படகு விபத்து: 5 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details