மாநிலங்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "இதுவரை செய்யப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் விநியோகம், மாநிலங்களின் கையிருப்பு குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 38 கோடியே 86 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில், பயன்பாடு போக ஒரு கோடியே 54 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன.
மேலும், அடுத்த சில நாள்களில் 63 லட்சத்து 84 ஆயிரத்து 230 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 21ஆம் தேதிமுதல் சுகாதாரத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை இலவசமாக விநியோகம் செய்துவருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 287 தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒரு மாதத்தில் 22,500 கணக்குகள் நீக்கம் - ட்விட்டர் அறிக்கை