புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் - தமிழிசை
புதுச்சேரி: கரோனா நோய்த்தொற்று காரணமாக புதுச்சேரியில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, இணையவழிக் கல்வி மூலம் பாடம் நடத்த துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழிசை
புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதன் காரணமாக அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 26) முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஆறு நாள்களுக்கு இணையவழிக் கல்வி மட்டுமே நடத்தப்படும்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம்!