தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் - தமிழிசை

By

Published : Mar 25, 2021, 10:12 PM IST

புதுச்சேரி: கரோனா நோய்த்தொற்று காரணமாக புதுச்சேரியில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, இணையவழிக் கல்வி மூலம் பாடம் நடத்த துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழிசை
தமிழிசை

புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதன் காரணமாக அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 26) முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஆறு நாள்களுக்கு இணையவழிக் கல்வி மட்டுமே நடத்தப்படும்.

புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்
இறுதிப்பருவ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நேரடி வகுப்புகள் மூலம் கரோனாவுக்குரிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடத்த வேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details