தமிழ்நாடு

tamil nadu

கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

By

Published : Aug 22, 2021, 10:06 AM IST

Updated : Aug 22, 2021, 11:06 AM IST

உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர்
பிரதமர்

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் (89), வயது மூப்பு மற்றும் பல்வேறு நோய் காரணமாக ஜூலை மாதம் 4ஆம் தேதி லக்னோவின் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சையில் இருந்த கல்யாண் சிங், நேற்று (ஆக.21) மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி லக்னோ சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னதாக இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, "கல்யாணின் மறைவு எனக்கு வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவிற்கு வருத்தத்தை கொடுத்துள்ளது" தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:கல்யாண் சிங் பாஜகவிலிருந்து பிரிந்தபோது என்ன நடந்தது?

Last Updated : Aug 22, 2021, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details