தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி மீது புகார்களை அடுக்கும் மம்தா: தேர்தல் ஆணையத்தின் மீதும் அதிருப்தி! - மோடி மம்தா மோதல்

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

PM Modi
PM Modi

By

Published : Apr 1, 2021, 7:06 PM IST

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்-பாஜக இடையே காரசாரமான மோதல் நிலவிவருகிறது. அதற்கான பரப்புரை தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று (ஏப் 1) முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மம்தாவுக்கு எதிராக அவரது முன்னாள் தளபதியான சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் களம்காண்கிறார். இன்று நந்திகிராமில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் தினத்தன்று ஜெயநதக் பகுதியில் பரப்புரை செய்து தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிவிட்டார்.

பாஜகவுக்கு துணை போகும் விதமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இது போன்ற மோசமான தேர்தலை நான் கண்டதே இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய ரிசர்வ் படையினரை வைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.

வாக்கு மையங்களை கைப்பற்றியதாக இதுவரை 63 புகார்கள் வந்துள்ளன. இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆளுநர் ஜக்தீப் தன்கரை சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.

இதையும் படிங்க:காஷ்மீரில் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details