தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 1, 2022, 4:41 PM IST

ETV Bharat / bharat

வறுமை... தாயின் உடலை 80 கி.மீ. பைக்கில் கொண்டு சென்ற மகன்...

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிக கட்டணம் கேட்டதால், இறந்த தாயின் உடலை பைக்கில் வைத்து கொண்டு செல்லும் நிலைக்கு பழங்குடியின இளைஞர் தள்ளப்பட்டார்.

madhya-pradesh-man-carries-mother-body-on-bike-for-80-km-as-ambulance-cost-rs-5000
madhya-pradesh-man-carries-mother-body-on-bike-for-80-km-as-ambulance-cost-rs-5000

போபால்: மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தின் கோதாரு கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின மூதாட்டி ஜெய்மந்திரி யாதவ்(70). இவர் உடல்நலக்குறைவு காரணமாக 80 கிமீ தொலைவில் உள்ள ஷஹதோல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை (ஆகஸ்ட் 1) மாராடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவரது உடலை கோதாரு கிராமத்திற்கு கொண்டு செல்ல அவரது மகன் ஆம்புலன்ஸ் தேடியுள்ளார். குறைந்தபட்சம் ரூ.5,000 கொடுத்தால் மட்டுமே வருவோம் என்று ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வளவு பணமில்லாத அந்த இளைஞர் ரூ.100 மதிப்புள்ள மரப்பலகையை வாங்கி தனது பைக்கில் வைத்து கட்டினார். இதில் தாயின் உடலை வைத்து சொந்த கிராமம் நோக்கி புறப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க:ஹிமாச்சலில் திடீர் வெள்ளம்... 150-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு...

ABOUT THE AUTHOR

...view details