மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் பின்னகுரியைச் சேர்ந்த 46 வயதான ஷங்கர் பட்டாச்சார்யா, மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி, நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூன் 15ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய அவர், 28 நாட்களை கடந்து பயணத்தை தொடர்கிறார். தனது கோரிக்கையை முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்துவதற்காக, நடை பயணமாக காளிகாட் சென்று கொண்டிருக்கிறார்.
சுமார் 750 கிலோ மீட்டர் நடந்து சென்று, தான் கையில் எடுத்துச் செல்லும் மண்ணை, முதல்வரிடம் ஒப்படைத்து கோரிக்கை வலியுறுத்தவுள்ளார்.
மேற்குவங்கத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு மம்தா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மம்தாவை சந்திப்பது தொடர்பாக மம்தாவின் ஆதரவாளரான ஷங்கர் பட்டாச்சார்யா கூறுகையில், "முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஜல்பைகுரி மாவட்டத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தமைக்கு நன்றி. கடந்த 28 நாட்களாக நான் நடைபயணம் மேற்கொள்கிறேன். பகலில் நடப்பேன், இரவில் ஓய்வெடுப்பேன். நான் நடைபயணம் மேற்கொள்ள காரணம் திதிதான்(மம்தா).