தமிழ்நாடு

tamil nadu

9ஆவது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 542 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

By

Published : Jun 16, 2021, 10:15 AM IST

Published : Jun 16, 2021, 10:15 AM IST

இந்தியா
இந்தியா

இந்தியாவில் நேற்று (ஜூன் 15) ஒரேநாளில் 62 ஆயிரத்து 224 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 96 லட்சத்து 33 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரண்டாயிரத்து 542 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 79 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 100 ஆக உள்ளது. மேலும் எட்டு லட்சத்து 65 ஆயிரத்து 342 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதுவரை, மொத்தமாக 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 14 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை இன்றுமுதல் கட்டாயம்

ABOUT THE AUTHOR

...view details