தமிழ்நாடு

tamil nadu

Rasi Palan:மார்ச் 15ஆம் தேதிக்கான ராசிபலன்!

By

Published : Mar 15, 2023, 6:25 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

Etv Bharat
Etv Bharat

மேஷம்:இன்று உங்களுக்கு ஆன்மீக உணர்வு ஏற்படும். இதன் காரணமாக, உறவுகள் மற்றும் அண்டை வீட்டில் உள்ளவர்கள் உடனான உறவு பாதிக்கப்பட்டது உட்பட, கடந்த காலத் தவறுகளுக்கு அவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வீர்கள். இதனால், வருங்காலத்தில் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அஸ்திவாரமாக இருக்கும்.

ரிஷபம்:ஒரு சாதாரண நாள், ஒரு அற்புதமான நாளாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனினும் மாலையில் பதற்றம் மற்றும் மன அழுத்தம் இருக்கலாம். அதுமட்டுமல்லாது, மாலையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் நெருக்கமாக பொழுதை கழிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மிதுனம்:இன்று நீங்கள் உணவு பழக்கவழக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தக்கூடும். கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில், பணியில் மூத்தவர்களிடம் இருந்து உதவியும் ஊக்கமும் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

கடகம்:இன்றைய தினத்தின் முதல் பகுதியில், பதற்றமான மனநிலை இருக்கும். பணியிடத்திலும் மிகவும் பதற்றமடைந்து கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். உங்களது ரத்த கொதிப்பை சோதித்துக் கொள்வது நல்லது. தியானப் பயிற்சியை கடைபிடிக்கவும். அலுவலகத்தில் நிதானத்தை இழக்க வேண்டாம். ஏனென்றால், இதன் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருக்கும்.

சிம்மம்:கலை திறன் பெற்ற நீங்கள், இன்று உங்கள் செயல்திறனை வெளிப்படுத்துவீர்கள். இன்று பணியில் ஈடுபடுவதில் உற்சாகம் அதிகம் இருக்கும். நீங்கள் செய்யும் பணிகளை திறம்பட செய்து முடித்து விடுவது, உங்களை விமர்சிப்பவர்களின் வாயை எளிதாக மூடுவதற்கான சரியான உத்தி ஆகும்.

கன்னி:இன்றைய நாள் சோர்வான உணர்வுடன் தொடங்கினாலும், உற்சாக உணர்வுடன் முடிவடையும். மாலையில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், நீங்கள் மன நிம்மதியுடன் இருப்பீர்கள். இந்த நாளை முடிவினில் அனைத்து மன அழுத்தங்களும் நீங்கி, மனதிற்கு பிடித்தவர்கள் உடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

துலாம்: இன்று முக்கியத்துவம் இல்லாத விஷயங்கள் குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள். எப்படி இருந்தாலும் மற்றவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, செயல்பட்டால் அனைத்தும் சுமுகமாக நிறைவடையும். வர்த்தகத் துறையை பொருத்தவரை, பல்வேறு வழிகளில் இந்த பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்:ஒரு அற்புதமான நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. நாளின் பெரும்பாலான நேரம் வழக்கமான பணிகளையே மேற்கொள்வீர்கள். போட்டி அதிகம் இருக்கும். எனினும் நீங்கள் மாலையில் உங்களை அலங்கரித்துக் கொண்டு சமூக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

தனுசு:இன்றைய தினத்தில், உங்கள் புன்னகையின் மூலம் உங்களைப் போகும் கடந்து போகும் அனைவரின் மனதையும் நீங்கள் கவரும் வண்ணம் இருப்பீர்கள். பணியிடத்தில், உங்கள் அறிவார்ந்த ஆலோசனைகளின் மூலம் உடன் பணிபுரிபவர்கள் பலன் அடைவார்கள். மாலை நேரத்தில், உங்கள் காதல் துணையுடன் நீங்கள் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளதால், மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மகரம்:அலுவலகத்தில், பலவிதமான கேள்விகளுக்கான பதிலை தேடுவதில், பெரும்பாலான நேரம் செலவழியும். புதிய வர்த்தக திட்டம் அல்லது முயற்சியை மேற்கொள்ள போதுமான அளவு நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது உள்ள வர்த்தகமும் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மேலாக, மேம்படும்.

கும்பம்:இன்றைய தினம் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். இது உங்களது பணிக்கு மட்டுமே பொருந்தும். அதற்கான பலன்களுக்கு பொருந்தாது. பெரிய பாதிப்புகள் ஏதேனும் ஏற்படாது என்பதால், அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் அல்லது உங்களது வாழ்க்கைத் துணை இன்று மாலை உங்களிடம் கோபம் கொள்ளலாம். ஆனால், நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கவும்.

மீனம்:இன்றைய தினம் ஒரு ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். பழைய நண்பர்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. பழைய நண்பர்கள் அல்லது பழைய காதலரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அனைவரையும் இருக்கும் வண்ணம் செயல்படுவீர்கள். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படிங்க:இன்றைய ராசிபலன்: மார்ச் 14ஆம் தேதிக்கான ராசிபலன்!

ABOUT THE AUTHOR

...view details