பெங்களூரு:கர்நாடக தலைநகர் பெங்களூரு விஜயநகரை சேர்ந்தவர் விநாயக், இவர் ராஜாஜி நகரில் உள்ள மகேந்திரா கார் ஷோரூமில் கடந்த சில வருடங்களாக விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த மாதம் விற்பனையில் சிறப்பாகச் செயல்பட்டதால் இவருக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தனது நண்பர்களுக்கு பார்டி ஏற்பாடு செய்ததுடன் மதுபோதையில் அலட்சியமாகக் காரை இயக்கி வந்துள்ளார். அப்போது ஆர்ஆர் நகர் மெட்ரோ ரயில்நிலையம் அருகே நள்ளிரவில், பைக்கில் உணவு டெலிவரி செய்வதற்காகச் சென்று கொண்டு இருந்த பிரசன்னா என்ற நபர் மீது கார் மோதியுள்ளது. அப்போது காரை நிறுத்தாத விநாயக் தொடர்ந்து சுமார் 100 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரசன்னா துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையும் படிங்க :சிறையில் உயிரிழந்த இளைஞர்... உடலை வாங்க மறுத்து 5ஆவது நாளாக தொடர்ந்த போராட்டம்
விபத்தை ஏற்படுத்திய காரை நிறுத்தாத விநாயக் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பிற வாகன ஓட்டிகள் காரை 1 கி.மீ., துரத்திச் சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்த விநாயக்கின் நண்பர்களான மூன்று இளம்பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் என 4 பேர் காரில் இருந்து இறங்கித் தப்பி ஓடிவிட்ட்டனர்விநாயக்