தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 15, 2022, 1:01 PM IST

ETV Bharat / bharat

சர்வதேச கிரிக்கெட் நடுவர் அசாத் ரவூப் உயிரிழப்பு

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கேட் வீரர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்த அசாத் ரவூப் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சர்வதேச கிரிக்கெட் அம்பையர் அசாத் ரவூப் உயிரிழந்தார்
சர்வதேச கிரிக்கெட் அம்பையர் அசாத் ரவூப் உயிரிழந்தார்

டெல்லி: பாகிஸ்தானின் முன்னாள் நடுவர் ஆசாத் ரவூப், லாகூரில் மாரடைப்பு காரணமாக தனது 66ஆவது வயதில் உயிரிழந்தார். 2000 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக முதல்முறையாக ரவுஃப் தோன்றினார்.

அவர் 64 டெஸ்ட் போட்டிகளில் (49 ஆன்-பீல்டு அம்பயராகவும் 15 டிவி நடுவராகவும்), 139 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச டி-20 போட்டிகளில் நடுவராக இருந்தார்.

நடுவராக பதவியேற்பதற்கு முன் நேஷனல் வங்கி மற்றும் ரயில்வேக்காக 71 முதல் தர போட்டிகளில் விளையாடிய ரவூப், ஏப்ரல் 2006 இல் ஐசிசி எலைட் பேனலில் நியமிக்கப்பட்டார். சகநாட்டவரான அலீம் டாருடன், பாகிஸ்தானின் மிக முக்கியமான நடுவர்களில் ஒருவராக ஆனார்.

இருப்பினும், 2013 ஆம் ஆண்டில், ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் ஊழலில் மும்பை காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டதால் அவரது அம்பையர் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அவர் அந்த ஐபிஎல் சீசனின் பாதியிலேயே இந்தியாவை விட்டு வெளியேறினார், மேலும் சாம்பியன்ஸ் டிராபியிலிருந்தும் விலக்கப்பட்டார் மற்றும் ஐசிசி உயரடுக்கு குழுவிலிருந்து நீக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில், ஊழல் மற்றும் முறைகேடு ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளில் பிசிசிஐ அவருக்கு ஐந்தாண்டு தடை விதித்தது.

இதையும் படிங்க:இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details