தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 23, 2022, 8:49 PM IST

ETV Bharat / bharat

ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும் - கியானி ஹர்ப்ரீத் சிங்!

ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற ஒரு நவீன ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும் என்று ஸ்ரீ அகல் தக்த் சாஹிப் அறக்கட்டளையின் தலைவர் கியானி ஹர்ப்ரீத் சிங் கூறினார்.

Sikh
Sikh

பஞ்சாப்: குரு ஹர்கோவிந்தின் சிம்மாசன தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கியானி ஹர்ப்ரீத் சிங், "முகலாயர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தபோது, ​​சீக்கியர்களுக்கு ஆயுதம் ஏந்தும்படி அறிவுறுத்தியவர், குரு ஹர்கோவிந்த்.

இப்போது நாமும் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். குரு வகுத்த பாதையில் சீக்கிய சமூகம் நடக்க வேண்டும். அனைத்து சீக்கியர்களும் குருவின் புனித உரையை கடைப்பிடிக்க வேண்டும். இன்றைய நவீன ஆயுதங்களை சட்டப்பூர்வமாக வைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த ராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர் விஜய் பரத்வாஜ், இந்து சமூகத்தினர் உரிமம் பெற்ற ஆயுதங்களை தங்கள் வீடுகளில் வைத்திருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:காரில் எரிந்த நிலையில் இளம் ஜோடி... கர்நாடகாவில் சோகம்...

ABOUT THE AUTHOR

...view details