நாட்டில் கரோனா பரவலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. குறிப்பாக, குடியிருப்புகள், விடுதிகள், பணியிடங்களில் அதிகளவில் கரோனா பாதிப்பு பதிவாவதைக் காண முடிகிறது.
கரோனா பரவலைத் தடுத்திட மத்திய அரசும், மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. மக்கள் முகக்கவசம் அணிவதும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அவசியம் எனச் சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம், அபராதம் வசூலிக்கப்பட்டுவருகிறது. ஆனால், தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலோ அல்லது பேரணியிலோ, பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருக்கின்றனர்.
இவ்விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்துவந்த தேர்தல் ஆணையம், அனைத்து தேசிய, மாநில கட்சிகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.