தமிழ்நாடு

tamil nadu

Brij Bhushan singh: மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமீன்!

By

Published : Jul 20, 2023, 5:45 PM IST

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் உள்பட இருவருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Brij Bhushan singh
Brij Bhushan singh

டெல்லி : மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜந்த மந்தரில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்திய போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னாள் மற்றும் தற்போதைய விளையாட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு விழாவில் முன்னிட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற வீரர், வீராங்கனைகளுக்கும் டெல்லி போலீருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற வீரர், வீராங்கனைகளை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போட்டிகளில் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச உள்ளதாக வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர். விவசாய சங்கங்களின் தலையீட்டை அடுத்து வீரர், வீராங்கனைகளின் முடிவு கைவிடப்பட்டது.

பாலியல் புகார் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே கடந்த ஜூலை 15ஆம், தேதி பிரிஜ் பூஷன் சிங் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் வினோத் தோமர் உள்ளிட்டோர் மீது டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆயிரத்து 82 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

டெல்லி போலீசாரின் குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பிரிஜ் பூஷனுக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் வினோத் தோமர் ஆகியோருக்கு கடந்த ஜூலை 18ஆம் தேதி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், இன்று (ஜூலை. 20) இந்த வழக்கி மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் பிரிஜ் பூஷன் சிங் உள்பட இருவருக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை மிரட்டல் விடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க :டெல்லி அவசர சட்ட விவகாரம்... உச்ச நீதிமன்றம் கறார்... ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!

ABOUT THE AUTHOR

...view details