தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 14, 2021, 5:37 PM IST

ETV Bharat / bharat

கடலூரில் வெறிச்சோடிய டாஸ்மாக்!

கடலூர்: டாஸ்மாக் கடைகளில் உயர் ரக மதுபானங்கள் மட்டுமே கையிருப்பு இருப்பதால், மதுப் பிரியர்கள் புதுவைக்கு படையெடுத்து செல்கின்றனர்.

புதுச்சேரி சரக்கை விரும்பும் கடலூர் மது பிரியர்கள்!
புதுச்சேரி சரக்கை விரும்பும் கடலூர் மது பிரியர்கள்!c

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன். 14) ஊரடங்கு தளர்வின் அடுத்தகட்டமாக மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை டாஸ்மாக் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது.

கடலூரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடை முன் தடுப்புகள் அமைத்து, வரிசையில் நின்று செல்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுப் பிரியர்கள் மது வாங்கி செல்வார்கள்.

இதனால், அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இன்று காலையிலிருந்து டாஸ்மாக்கிற்கு மதுப் பிரியர்கள் வராதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏனெனில் தமிழ்நாட்டைக் காட்டிலும் கடலூர் அருகே உள்ள புதுச்சேரியில் மதுபானங்கள் விலை மிக குறைந்தளவில் கிடைக்கிறது. கடலூர் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக மதுபானங்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது. குடோனில் இருந்து இன்று பிற்பகல் வரை மதுபானங்கள் வராததால் மதுப் பிரியர்கள் புதுவைக்கு படையெடுத்து செல்வதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாஸ்க் போடாதவர்களுக்கு மரண பயம் காட்டிய ஊராட்சி

ABOUT THE AUTHOR

...view details