தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரு முறை இறந்ததாக அறிவிக்கப்பட்ட கரோனா நோயாளி!

இரு முறை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட கோவிட் பெருந்தொற்று பாதிப்பாளர் ஒருவர் உயிருடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.

By

Published : Apr 15, 2021, 10:38 PM IST

vidisha news corona updates coronavirus in vidisha vidisha medical college medical college vidisha இரு முறை இறந்ததாக அறிவிக்கப்பட்ட கரோனா நோயாளி கரோனா கோவிட் Corona
vidisha news corona updates coronavirus in vidisha vidisha medical college medical college vidisha இரு முறை இறந்ததாக அறிவிக்கப்பட்ட கரோனா நோயாளி கரோனா கோவிட் Corona

விதிஷா (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேச மாநிலம் விதிசாவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு மருத்துவக் கல்லூரியின் அலட்சியம் காரணமாக உயிருடன் இருக்கும் நோயாளி இரண்டு முறை இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தப் பாதிப்புக்குள்ளானவர் கோரலால் கௌரி.

முன்னதாக கோரலால் சடலம் என்று தவறான உடல் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸுனால் பாதிக்கப்பட்ட கோரலால் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் ஏப்.13ஆம் தேதி இறந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் உறவினர்கள் மருத்துவமனையை அடைந்த போது பாதிக்கப்பட்ட நபர் சுவாசித்துக்கொண்டிருந்தார்.

மீண்டும், மறுநாள் (ஏப்.14) ஆம் தேதி காலை 8:30 மணிக்கு, இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு மருத்துவரிடம் அழைப்பு வந்தது. இருப்பினும், இறந்தவரின் மகன் தந்தையின் உடலைப் பார்க்க வற்புறுத்தியபோது, அது வேறு ஒருவரின் உடல் என்று தெரியவந்தது. மருத்துவமனை அலுவலர்களின் விசாரணையைத் தொடர்ந்து, கோரலால் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், அவர் தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இரு முறை இறந்ததாக அறிவிக்கப்பட்ட கரோனா நோயாளி!

இதற்கிடையில், கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்று மருத்துவக் கல்லூரி டீன் சுனில் நந்தேஷ்வர் தெரிவித்தார். இது குறித்து அவர், “உண்மையில், கோரலால் ஒரு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். ஏனெனில் அவர் சுவாசிக்க கடுமையான சிக்கலை எதிர்கொண்டார், ஒரு கட்டத்தில் அவரது துடிப்பு நின்றுவிட்டது, அப்போது செவிலியர் அவரை இறந்துவிட்டதாக தவறாக அறிவித்தார்.

உடனடியாக, அருகிலுள்ள மருத்துவர்களில் ஒருவர் சிபிஆர் நுட்பத்தைப் பயன்படுத்தி கோரெலலை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றார், இது வழக்கமாக ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஆகும். டாக்டர்களின் முயற்சியைத் தொடர்ந்து, கோரேலலின் துடிப்பு மீட்டெடுக்கப்பட்டது, உடனடியாக அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details