தமிழ்நாடு

tamil nadu

பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்... சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு!

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துவக்கினர்.

By

Published : Jul 29, 2023, 3:18 PM IST

Published : Jul 29, 2023, 3:18 PM IST

Manipur
Manipur

டெல்லி :மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணையை தொடங்கி உள்ள சிபிஐ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 170க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.

கடந்த மே மாதம் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதில் அந்த இரண்டு பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசு பரிந்துரை செய்தது. மாநிலத்திற்கு வெளியே சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மணிப்பூர் அரசு கோரிக்கை விடுத்தது.

மணிப்பூர் விவவகாரம் தொடர்பாக அதன் அண்டை மாநிலமான அசாமில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மணிப்பூரில் அரங்கேறிய அனைத்து கலவரச் சம்பவங்கள் தொடர்பாக 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என மாநில அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து உள்ள சிபிஐ விசாரணையை துவக்கி உள்ளது. இதனிடையே கலவரம் பாதித்த மணிப்பூருக்கு எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் 21 பிரதிநிதிகள் இரண்டு நாட்கள் சென்று உள்ளனர்.

வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு தேடி முகாம்களில் தஞ்சமடைந்தவர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து எதிர்க்கட்சிகள் கூட்டணியின் 21 எம்.பிக்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :எல்லை கடந்த காதல்.. ஆந்திர இளைஞரை கரம் பிடித்த இலங்கை பெண்!

ABOUT THE AUTHOR

...view details