கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல முயற்சிகளின் ஈடுபட்டுவருகின்றனர்.
டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்குப் பாலமாக இருக்க வேண்டுமே தவிர தடைக்கல்லாக இருக்கக் கூடாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இக்கருத்தை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.