அலகாபாத்: பிரயாக்ராஜில் கங்கைக் கரையில் கிடந்த சடலங்களை அப்புறப்படுத்த மாநில அலுவலர்களுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடிசெய்தது.
தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ், நீதிபதி பிரகாஷ் பாடியா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரரின் வாதத்தை நிராகரித்தது. மேலும் தகனம்செய்வது, உடல்களைக் கண்ணியமாக அப்புறப்படுத்துவது அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டது.
நீதிமன்றம் மனுதாரரின் நேர்மையான குற்றச்சாட்டுகளைக் கேள்வி எழுப்பியதுடன், இறந்த உடல்களை அடையாளம் கண்டுகொள்வதன் மூலமோ அல்லது இறுதிச்சடங்கை நடத்துவதன் மூலமோ மனுதாரர் தனிப்பட்ட முறையில் பங்களிப்பு ஆற்றினாரா என்பதை அறிய விரும்பியது.
"இந்த விவகாரத்தில் உங்களின் தனிப்பட்ட பங்களிப்பு என்ன? நீங்கள் தோண்டியெடுத்து உடல்களைத் தகனம்செய்தால் எங்களிடம் கூறுங்கள்" என்று நீதிபதிகள் கேட்டனர்.
முறையாக ஆய்வுசெய்யாமல் பொதுநல வழக்கு என்ற பெயரில் அணுகிய மனுதாரர் மீது நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் மனுவை தள்ளுபடிசெய்தது. இந்த மனு பிரன்வேஷ் என்ற வழக்கறிஞரால் தொடுக்கப்பட்டது.