தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2020, 6:00 PM IST

ETV Bharat / bharat

கணவருடன் தகராறு; மூன்று குழந்தைகளுடன் நீரில் மூழ்கிய மனைவி!

பார்மர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman-jumps-into-reservoir-with-3-children-in-rajasthan-all-dead
woman-jumps-into-reservoir-with-3-children-in-rajasthan-all-dead

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தின் காரா மஹிசான் கிராமத்தில் வசித்துவருபவர் பப்பு தேவி. 30 வயதாகும் இவருக்கு, திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டிலிருந்த தனது மூன்று குழந்தைகளுடன் நீரில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில் அனைவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சிந்தாரி பகுதி காவல் நிலைய அலுவலர் தரப்பில் கூறுகையில், ''நீரில் மூழ்கிய அனைவரும் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தின் மூத்த மகள் அவரது பாட்டியுடன் இருந்ததால், அவர் மட்டும் உயிருடன் உள்ளார். உறவினர்கள் தகவல் கொடுத்த பின்னர் தான் சம்பவ இடத்திற்கு வந்தோம்.

உடல்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடற்கூறாய்வு நடத்தப்படவுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்ததாக உறவினர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதுவரை முழுமையான காரணம் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது'' என்றனர்.

இதையும் படிங்க:தர்பூசணியில் பீர் தயாரித்து விற்பனை - சிறுவன் உட்பட இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details