தமிழ்நாடு

tamil nadu

கணவனை குச்சியால் அடித்தே கொலை செய்த மனைவி!

By

Published : Oct 7, 2019, 9:50 AM IST

ஸ்ரீகாகுளம்: ஆந்திராவில் தனது கணவனை குச்சியால் அடித்தே கொலை செய்த மனைவியின் கொடூரச் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கணவனை கொலை செய்த மனைவி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கட்ராவ்(32), ஜகதேஸ்வரி. இவர்களுக்கு சாத்விக் என்னும் இரண்டு வயது ஆண்குழந்தை உள்ளது.

வெங்கட்ராவ் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, வீட்டிலிருந்த சமையல் பொருட்களையெல்லாம் தூக்கிவீசிச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு கையில் மண்ணெண்ணெயுடன் வீட்டிற்கு வந்த வெங்கட்ராவ், தூங்கிக்கொண்டிருந்த ஜகதேஸ்வரியையும் அவரது மகன் சாத்விக்கையும் எரிக்க முயன்றுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்சியடைந்த ஜகதேஸ்வரி, கணவன் கையிலிருந்த மண்ணெண்ணெயை தள்ளிவிட்டுள்ளார், ஆனால் வெங்கட்ராவ் மீண்டும் அவர்களை எரிக்க முயன்றுள்ளார். எனவே தங்களை காத்துக்கொள்வதற்காக ஜகதேஸ்வரி, கணவனின் கழுத்தில் குச்சியால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் எதிர்பாராவிதமாக வெங்கட்ராவ் உயிரிழந்தார்.

கணவனை கொலை செய்த மனைவி
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஜகதேஸ்வரியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details