தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுலை ஜின்னாவுடன் ஒப்பிட்ட உமா பாரதி!

போபால்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை முகமது அலி ஜின்னாவுடன் ஒப்பிட்டு பாஜக மூத்தத் தலைவர் உமா பாரதி பேசினார்.

By

Published : Jan 10, 2020, 2:22 PM IST

Uma Bharti compares Rahul, Priyanka to Jinnah; accuses them of fear-mongering
Uma Bharti compares Rahul, Priyanka to Jinnah; accuses them of fear-mongering

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவில் பாஜக மூத்தத் தலைவர் உமா பாரதி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசினார். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரை பாகிஸ்தானின் முகமது அலி ஜின்னாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

இது குறித்து அவர் மேலும் பேசும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் உமா பாரதிக்கோ அல்லது ஓவைசிக்கோ பிரச்னை வரப்போவது இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எவரும் பிரச்னைக்குள்ளாகப்போவதில்லை. யாருடைய உரிமையும் பறிக்கப்படப்போவதில்லை. ஆனாலும் பேய் மனநிலை கொண்ட சிலர் இது தொடர்பாக வதந்திகளைப் பரப்பிவருகின்றனர்.

ராகுலை ஜின்னாவுடன் ஒப்பிட்ட உமா பாரதி!

அவர்கள் வதந்தி பரப்புவதன் நோக்கம் இந்தியாவை துண்டாட வேண்டும் என்பதே. நாடு உடைக்கப்பட்டதால் யாருக்கும் பலனில்லை. ஆனால் ஜின்னா தோன்றினார். இன்று ஜின்னா இல்லை. ராகுல், பிரியங்கா உள்ளனர். அவர்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி சமூக சுற்றுச்சூழலை கெடுக்கின்றனர்” என்றார்.

இதையடுத்து உமாபாரதி சோனியா காந்தி மீது தாக்குதல் தொடுத்தார். அதில், “இந்த நாட்டின் மருமகள் நாட்டை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சோனியா காந்தியின் தந்தை முசோலினி ராணுவத்தில் பணியாற்றியவர்.

இன்று அவர் இந்த நாட்டின் மருமகள். நாங்கள் அவரை மதிக்கிறோம். நாங்கள் உங்களிடம் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பாதபோது, இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களிடம் எவ்வாறு கேள்வி எழுப்புவோம்” எனத் தெளிவாக விளக்கினார்.

இதையும் படிங்க: மும்பையில், 'காந்தி சாந்தி யாத்திரை'யை தொடங்கிய சரத் பவார்!

ABOUT THE AUTHOR

...view details