தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்கியதில் இரு காவலர்களுக்கு காயம்!

திருவனந்தப்புரம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சமாதானம் செய்ய சென்ற காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கியதில் காவலர்கள் இருவர் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By

Published : May 11, 2020, 8:34 PM IST

ே்ே்
ே்்

ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில், கேரளாவிலிருந்து 21 ரயில்கள் மூலம் 24 ஆயிரத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் ஒருவத்தில்கோட்டா (Oruvathilkotta) பகுதியில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுவந்த 700 தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல முடியாத விரக்தியில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே இடத்தில் 700 பேர் கூட்டமாக கூடியது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச முயன்ற போது, அவர்கள் மீது தொழிலாளர்கள் கற்களை வீசியதில் இரு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நிலைமை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், உயர் அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதிக்கு அதிரடி படையினருடன் விரைந்த காவல்துறை உயர் அலுவலர்கள், வெளிமாநில தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்களின் கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும் என்ற உறுதியினைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:மது போதையில் ரோட்டில் உருண்ட அரசு ஊழியர்!

ABOUT THE AUTHOR

...view details