தமிழ்நாடு

tamil nadu

1000 கி.மீ நடந்து சொந்த ஊர் திரும்பிய கர்ப்பிணி!

By

Published : May 22, 2020, 12:12 PM IST

பாரத்பூர்: 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்தினருடன் 10 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டு 600 மைல்களை (1000 கி.மீ) கடந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

regnant woman walking  surat to uttar pradesh with family  bharatpur news  migrant labour news  etv bharat news  bus politics  குடிப்பெயர்ந்த தொழிலாளர்கள்  பாரத்பூர் செய்திகள்  கர்ப்பிணி 1000கி.மீ நடைப்பயணம்  கர்ப்பிணி  கர்ப்பிணி நடைப்பயணம்
pregnant woman walking

குஜாரத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் சோனேந்திரி தேவி. இவர் தனது கணவருடன் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தார். இதனிடையே, கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, வேலையில்லாமல் வருமானமின்றி வறுமையில் தவித்து வந்த சோனேந்திரி தேவியின் கணவர் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டார். அப்போது, சோனேந்திரி தேவி 7 மாதங்கள் கர்ப்பமாக இருந்தார். இருப்பினும் வறுமையால் சோனேந்திரி தேவி துயரப்படுவதை தாங்க முடியாத கணவர் மனதை கல்லாக்கி கொண்டு தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.

நடைபயணமாக குடும்பத்தினருடன் நடந்து வரும் கர்ப்பிணி

இதையடுத்து, அவர்கள் நடைபயணமாக 620 மைல்களை (1000 கி.மீ) கடந்து 10 நாள்களில் சூரத் நகரை வந்தடைந்தனர். இது குறித்து, சோனேந்திரி தேவி கூறுகையில், "கரோனா ஊரடங்கு எங்களை மிகவும் பாதித்துள்ளது. பத்து நாள்கள் கடும் வெயில் கால் கடுக்க நடந்து வந்தோம். வரும் வழியில் எங்களுக்கு உதவ யாராவது முன்வர மாட்டர்களா என்ற ஏக்கத்தோடு நடந்துகொண்டே 600 மைல்களை கடந்து விட்டோம்" என்றார்.

இதையும் படிங்க:விமான பயணச்சீட்டு முன்பதிவு 12.30 மணிக்குத் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details