தமிழ்நாடு

tamil nadu

தனிமைப்படுத்தப்பட்ட மைய கழிவறையில் சிறுமிக்கு வன்கொடுமை!

By

Published : Jul 25, 2020, 9:32 AM IST

Updated : Jul 25, 2020, 11:08 AM IST

டெல்லி: சத்தர்பூரிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 14 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sexual harassment
Sexual harassment

தெற்கு டெல்லி சத்தர்பூரிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 19 வயதுடைய இளைஞரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து டிஎஸ்பி பர்விந்தர் சிங் கூறுகையில், கழிவறைக்கு சென்ற 14 வயது சிறுமியை 19 வயது கொண்ட இளைஞரும் அவரது நண்பரும் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனியாக வார்டுகள் இருக்கும். ஆனால் இங்கே அப்படி இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து பரிசோதனை மைய அலுவலர் கூறுகையில், இந்தியா - திபெத்திய எல்லைப் பகுதி கப்பல் படையின்( ஐ.டி.பி.பி ) கீழ் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட முடியாதவர்கள் இங்கே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்களும் அருகே உள்ள குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் சிகிச்சைக்காக இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Last Updated : Jul 25, 2020, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details