தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 3, 2019, 8:56 PM IST

ETV Bharat / bharat

எனக்காக அம்பாள் எழுந்து வருவாள்... பாம்பு கடி வாங்கிய பக்தரின் வினோத நம்பிக்கை!

ஜெஜ்பூர்: இந்தியாவில் மருத்துவ சேவை முன்னேறி வரும் நிலையில், பாம்புகடித்த ஒருவர் கோயிலில் உட்கார்ந்துகொண்டு அம்பாள் காப்பாற்றுவாள் என அமர்ந்திருக்கும் சம்பவத்தை பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Snakebite Victim

ஒடிசா மாநிலம் ஜெய்பூரில் அசனஜார் கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் ராமகாந்த் நாயக். இவர் வழக்கம் போல் அவருடைய நிலத்தில் வேலை செய்தபோது, திடீரென அவரை பாம்பு கடித்துள்ளது.

பொதுவாக பாம்பு கடித்தால் பதற்றம் ஏற்பட்டு வேகமாக மருத்துவமனைக்கு செல்வது மனித இயல்பு. ஆனால் ராமகாந்த் நாயக்கோ எதற்கும் அஞ்சாமல், ''மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன். நமது கோயிலில் இருக்கும் தெய்வம் காப்பாற்றும்'' என கோயிலில் அமர்ந்துள்ளார்.

ஒடிசாவில் ஒரு பக்தாளின் போராட்டம்

இதனையறிந்த கிராம மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அதில் செல்ல மறுத்து தெய்வமே கதி என கோயிலில் அமர்ந்துள்ளார். இதனால் இவரை காப்பாற்றுவதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதனையும் அந்த கோயிலின் பூசாரியே செய்துள்ளார்.

நமது ஊர்களில் அம்மை நோய் வந்தால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்க்கும் அளவு முன்னேறி வரும் நிலையில், பாம்பு கடிக்கு அம்பாள் காப்பாற்றுவாள் என கோயிலில் அமர்ந்திருக்கிறார். விவசாயி ராமகாந்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இந்தியாவில் மருத்துவ வசதிகள் முன்னேறி வரும் நிலையில், மருத்துவத்தை நம்பாமல் அம்பாளை நம்புவதை சமூக வலைதளங்களில் கலாய்த்துவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: பள்ளியில் நுழைந்த பாம்பு - பிடிக்க முற்பட்டவருக்கு நேர்ந்த விபரீதம்

ABOUT THE AUTHOR

...view details