தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 26, 2019, 2:49 PM IST

ETV Bharat / bharat

வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் பலி..!

பெங்களூரு: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலியானவர்கள்

கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், பசவகல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் நதீம் ஷேக்(45). இவர் தனது குடும்பத்துடன் அதேப் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை மனைவி, நான்கு பிள்ளைகளுடன் உறங்கி கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு இடர்பாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த இடம்

பின்னர் தகவலறிந்து தீயணைப்புப் படை வீரர்களுடன் வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, ஆறுபேரையும் சடலமாக மீட்டனர். பின்பு சடலங்களை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கூரை இடிந்த விபத்தில் பலியானவர்கள்

ABOUT THE AUTHOR

...view details