தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2019, 2:26 PM IST

ETV Bharat / bharat

விரைந்து நடைபெற்று வரும் 'ககன்யான்' திட்டப்பணிகள் - விமானப்படை தகவல்

பெங்களூரூ: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Gaganyaan

இந்தியன் சொசைட்டி விண்வெளி மருத்துவத்திற்கான (IASM) 58வது வருடாந்திர மாநாட்டு நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் விமானப் பணியாளர் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யானுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கான குழுவினரைத் தேர்ந்தெடுப்பதற்கான திரையிடல் (ஸ்கிரீனிங்) செயல்முறை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த ஸ்கிரீனிங் செயல்முறையானது மிகவும் சிறப்பாக தொழில்நுட்ப ரீதியாக இந்தப்பணி நடைபெறுவதாக அவர் கூறினார். ககன்யான் திட்டத்திற்காக இந்திய விமானப்படை 12பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் இந்த ககன்யான் திட்டத்தை 2021 டிசம்பருக்குள் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பிரதமர் நரேந்திரமோடியின் கனவை நனவாக்க ஐஏஎஃப் உடன் இணைந்து இந்திய விமானப்படை இந்தப் பணியை மேற்கொள்ளவதாக மாநாட்டில் கலந்துகொண்ட விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'இரண்டாண்டுகளுக்குள் ககன்யான் திட்டம் நிறைவுபெறும்' - இஸ்ரோ முன்னாள் இயக்குநர் நம்பிக்கை!

ABOUT THE AUTHOR

...view details