தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்!

டெல்லி : ”உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை. குறிப்பிட்ட சில வகுப்புகளில் இருந்து மட்டுமே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்” என திமுக எம்.பி வில்சன் மாநிலங்களையில் பேசியுள்ளார்.

By

Published : Sep 19, 2020, 5:26 PM IST

sc-lacks-diversity-in-appointment-of-judges-p-wilson-to-rajya-sabha
sc-lacks-diversity-in-appointment-of-judges-p-wilson-to-rajya-sabha

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.19) மாநிலங்களவையில் நடந்தக் கூட்டத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் பேசினார். அதில், ''உச்ச நீதிமன்றத்தின் போக்குகளில் சில குழப்பங்கள் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், அனைத்துத் தரப்பினருக்குமான பிரதிநிதித்துவம் உச்ச நீதிமன்றத்தில் குறைந்து வருகிறது.

மகளிர் நீதிபதிகள், ஒடுக்கப்பட்டப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்ட நீதிபதிகள் ஆகியோரை நியமிப்பதில்லை. ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களே நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்களால் சமூகத்தின் முழுமையான கருத்துக்களை பிரதிபலிக்க முடியாது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான உரிமை மீறலைத் தடுக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை வேண்டும். நீதி மற்றும் பன்முகத்தன்மையை நிலைநாட்டும் விதமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில் பன்முகத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் கூடுதலாக 2.35 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க மக்களவை ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details