குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டார். அப்போது, அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் எங்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலவரங்கள் வெடிக்கவில்லை.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திலும் உள்துறை அமைச்சகத்திற்கு கீழ் இயங்கும் டெல்லியிலும் ஷாஹின் பாக் போன்ற போராட்டங்கள் 60 நாள்களுக்கு மேலாக நடைபெற்றுவருகின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் மாணவர்களைத் தாக்கினர். ஆனால், அந்த பயங்கரவாதிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை" என்றார்.