தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் பரப்புரையைத் தொடங்கவுள்ள ராகுல்!

நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி வரும் 23ஆம் தேதி முதல் பரப்புரையை மேற்கொள்கிறார்.

By

Published : Oct 18, 2020, 4:29 PM IST

rahul-gandhi-to-kick-start-poll-campaign-in-bihar
rahul-gandhi-to-kick-start-poll-campaign-in-bihar

டெல்லி:முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிகாரில் தேர்தல் பரப்புரையை அக்டோபர் 23ஆம் தேதி தொடங்குவார் எனவும்; அங்கு அவர் ஒரு நாளில் இரண்டு பேரணிகளில் உரையாற்றவுள்ளார் எனவும் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

பிகார் சட்டப்பேரவைத்தேர்தலையொட்டி, குறைந்தது ராகுல் காந்தியை வைத்து ஆறு பேரணிகளையாவது நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்தேர்தலுக்கும் இரண்டு பேரணிகள் நடத்தும் நோக்கில், திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் மட்டுமே உரையாற்றுவார் எனவும்; பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் பேரணி அட்டவணை விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் அக்டோபர் 23 முதல் பிகாரில் 12 தேர்தல் பேரணிகளை நடத்தவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details