தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கஞ்சா கடத்திய இருவரை தாக்கிய காவலர்கள் மீது விசாரணை

புவனேஸ்வர்: ஒடிசாவின் கொரத்பூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்காரர்களை பொது இடத்தில் வைத்து இரண்டு காவலர்கள் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அது குறித்து மாவட்ட காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

By

Published : Jun 5, 2019, 9:03 PM IST

ganja

ஒடிசாவின் கொரத்பூர் மாவட்டத்தில் உள்ள தொராகுடா என்னும் கிராம் அருகே கஞ்சா ஏற்றிவந்த வண்டியை பொய்பரிகுடா காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு காவலர்கள் நேற்று தடுத்து நிறுத்தினர்.

பின்னர், அதில் வந்த இருவரையும் பொது இடத்தில் வைத்து பெல்ட், லத்தியால் இரண்டு காவலர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீபோல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கொரத்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் கன்வர் விஷால் சிங் உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா கடத்தல்காரர்களை காவலர்கள் தாக்கும் வீடியோ

இதுகுறித்து காவல் துறை அலுவலர் சகாரிகா நாட் கூறும்போது, "இந்த சம்பவம் எந்த மாதிரியான சூழ்நிலையில் இந்த சம்பவமானது நடந்தது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details