தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 15, 2020, 1:27 PM IST

ETV Bharat / bharat

நெகிழிகளுக்கு மாற்று துணி, காகிதம் -  விடை சொல்லும் கிராமம்!

புதுச்சேரி: பிள்ளையார் குப்பம் கிராமத்தில் நெகிழிப் பயன்பாட்டை குறைக்கும் வகையில் துணி, காகித பைகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுவருகிறது.

Plastic free Nation
Plastic free Nation

நெகிழிப் பயன்பாட்டை பெரிய அளவில் குறைக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. ஆனாலும் நாடு முழுவதும் நெகிழிகளை ஒழிக்க முடியாமல் அரசும் தன்னார்வலர்களும் திணறிவருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க தொடங்கிவிட்டது. அதற்கான வழிவகைகளை அப்போதே யோசிக்க ஆரம்பித்த பிள்ளையார்குப்பம் கிராமம் இதற்காகப் புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை சார்பில் அப்போதிருந்த கிராம கவுன்சிலர்கள், உறுப்பினர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழு மூலம் அங்குள்ள மக்களுக்கு துணி, காகிதம் ஆகியவற்றைக்கொண்டு பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் கிராமத்தில் உள்ள டீக்கடைகள், மளிகை வணிகம் ஆகியவற்றில் நெகிழிப் பயன்பாட்டை அறவே ஒழிக்க அறிவுறுத்தப்பட்டு மக்கள் ஒத்துழைப்புடன் அவர்கள் உற்பத்திசெய்த பைகளை கடைகளுக்கு வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக கிராமப் பகுதியில் நெகிழி இல்லாத கிராமமாக இன்றுவரை நிமிர்ந்து நிற்கிறது.

நெகிழிகளுக்கு மாற்று துணி, காகிதம் - விடை சொல்லும் கிராமம்

புதுச்சேரி மாநிலத்தின் தென்பகுதியில் உள்ளது இந்த பிள்ளையார்குப்பம் கிராமம். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு குப்பைகளாக காட்சியளித்த இப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நெகிழிப் பயன்பாடு குறைக்கப்பட்டு தற்போது இயற்கையோடு பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது.

இப்பகுதி மாநிலத்தின் சிறந்த சுற்றுலா இடமாகத் தயாராகிவருகிறது. பனித்திட்டு கிராமத்திலும் பசும் புல்வெளிகள் அழகிய கடற்கரை கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள் போன்றவை இருப்பதால் தற்போது அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து உள்ளதாகக் கூறப்படுகின்றது. இன்று இந்தியாவில் நெகிழிப் பயன்பாடு குறைக்கப்பட்ட கிராமமாக பிள்ளையார்குப்பம் மிளிர்கிறது என்றால் அது மிகையாகாது.

இதையும் படிங்க: நாட்டுக்கு "உதவும் கரங்கள்"!

ABOUT THE AUTHOR

...view details