தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2020, 4:51 PM IST

ETV Bharat / bharat

காஷ்மீரில் தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது முறையாக அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

kahs
ash

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (நவம்பர் 12) துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக ராணுவ அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும், இன்று (நவம்பர் 12) காலை 9 மணியளவில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர், கிர்னி, கஸ்பா ஆகிய பகுதிகளில் மோட்டார்கள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் அத்துமீறலுக்குப் பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details