தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 16, 2020, 1:59 PM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் 50 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

டெல்லி: நேற்று மட்டும் 90 ஆயிரத்து 123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்து 20 ஆயிரத்து 359ஆக உயர்ந்துள்ளது‌.

corana
corana

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 80 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரஸ் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 123 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல், கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்து 20 ஆயிரத்து 359ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 66 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 39 லட்சத்து 42 ஆயிரத்து 360 ஆக உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 97 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா மாநிலத்தில் கரோனா பாதிப்பு ஐந்து லட்சத்து 83 ஆயிரமாக உள்ளது.

இதுவரை மொத்தமாக ஐந்து கோடியே 94 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 11 லட்சத்து 16 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details