தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2020, 8:28 PM IST

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா ஆளுநரைச் சந்தித்த சரத் பவார்

மும்பை: நாட்டில் அதிகளாவிலான கரோனா பாதிப்பைச் சந்தித்த மாநிலமாக மகாராஷ்டிரா திகழும் நிலையில் அம்மாநில அரசின் கூட்டணிக் கட்சித் தலைவரான சரத் பவார் இன்று ஆளுநரைச் சந்தித்தார்.

Sharad Pawar
Sharad Pawar

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. தேர்தலுக்குபின் பாஜகவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவருகின்றது.

தற்போது நாட்டிலேயே அதிக கரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழும் நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் நிர்வாகம் குறித்து விமர்சனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அரசின் செயல்பாட்டைக் குற்றஞ்சாட்டி பாஜக ஆளுநரிடம் முறையீடு செய்துவரும் நிலையில், இன்று கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அம்மாநில ஆளுநர் பி.எஸ். கோஷயாரியைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது என சரத் பவார் தரப்பு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நாராயன் ரானேவும் மாலை ஆளுநரைச் சந்தித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க:கேரள அரசின் உதவியை நாடும் மகாராஷ்டிரா

ABOUT THE AUTHOR

...view details