தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி வீடுகளில் மர்ம குறியீடு - பொதுமக்கள் பீதி

புதுச்சேரி: புதுச்சேரி சாரம் என்ற பகுதியில் உள்ள வீடுகளின் வெளிச் சுவரில் மர்மக் குறியீடுகள் வரையப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

pysign

By

Published : Aug 5, 2019, 12:58 PM IST

புதுச்சேரியின் சாரம் பகுதி நகரின் மத்திய பகுதியில் உள்ளது. இப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அங்குள்ள 12-க்கும் மேற்பட்ட வீடுகளின் வெளிப்புறச் சுவரில் மர்மக் குறியீடு போன்ற பொம்மை உருவம் வரையப்பட்டுள்ளது.

இந்தக் குறியீடுகள் அனைத்தும் கடந்த இரண்டு நாட்களில் இரவு நேரங்களில் வரையப்பட்டதாக அப்பகுதியினர் கூறியுள்ளனர். புதுச்சேரியில் தொடர்ச்சியாக வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், திருடர்கள் கொள்ளையடிக்க வசதியாக முன்கூட்டியே வேவு பார்த்து அடையாளத்திற்காக இந்தக் குறியீடுகளை வரைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

puducherrysign

இதையடுத்து, அப்பகுதியினர் காவல் துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details